ஆறுமுகக் கடவுள் மேற்கொண்ட சிவாலய தரிசன யாத்திரை (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் சூர சம்ஹாரத்தின் பொருட்டு, திருமால்; பிரமன்; இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் எண்ணிறந்த பூதப் படையினருடன் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றான். முதலில் கிரௌஞ்ச மலையிலுள்ள தாரகாசுரனை வதம் புரிந்து பின்னர் வழிதோறுமுள்ள சிவாலயங்களைத் தரிசித்தவாறே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்துச் செல்கின்றான். 

கந்தப் பெருமான் தரிசித்துப் பரவிய இச்சிவாலயங்களை நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 'உற்பத்தி காண்டத்திலுள்ள வழிநடைப் படலம்; குமாரபுரிப் படலம்' ஆகியவற்றில் விரிவாகப் பதிவு செய்து போற்றுகின்றார். இனி அத்தலங்களை அம்முறையிலேயே வரிசைக் கிரமமாக அறிந்து மகிழ்வோம்,

1. திருக்கேதாரம் 
2. காசி 
3. ஸ்ரீசைலம் 
4. திருக்காளத்தி எனும் ஸ்ரீகாளஹஸ்தி 
5. காஞ்சிபுர ஷேத்திரம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில் 
6. காஞ்சியிலுள்ள இன்ன பிற சிவாலயங்கள் (ஆலயப் பெயர்கள் குறிக்கப் பெறவில்லை)
7. திருவண்ணாமலை 
8. திருவெண்ணெய் நல்லூர் 
9. திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் 
10. திருத்தில்லை 
11. திருவிடைமருதூர் 
12. மயிலாடுதுறை 
13. திருப்பறியலூர் உள்ளிட்ட இன்ன பிற சிவாலயங்கள் (ஆலயப் பெயர்கள் குறிக்கப் பெறவில்லை)
14. ஸ்ரீவாஞ்சியம் 
15. திருவாரூர் 

இறுதியாய்த் திருவாரூரிலிருந்து புறப்பட்டுத் திருச்செந்தூர் தலத்தினை வந்தடைகின்றான். அங்கு சில தினங்கள் எழுந்தருளியிருந்து, நவவீரர்களுள் பிரதான வீரரான வீரவாகுவை இலங்கையிலுள்ள சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்திற்குத் தூதாகச் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றான் .


No comments:

Post a Comment